அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி |

சமீபத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு ஈடு கட்டியது. காட்சிகள் எல்லாமே ரியலிஸ்ட்டிக்காக இருக்க வேண்டும் என மெனக்கெட்டு படமாக்கி இருந்தார் இயக்குனர் சுகுமார். அதனால் தான் ராஷ்மிகா - அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை கூட அவர் ரொம்பவே நெருக்கமாக படமாக்கி இருந்தார். ஆனால் அது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளான நிலையில் படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இதை குறிப்பிட்டு சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் சுகுமார், “இதற்கே இப்படி என்றால், அல்லு அர்ஜுன்-பஹத் பாசில் நடித்த் க்ளைமாக்ஸ் காட்சியில் இருவரையும் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்க வைத்து சண்டைக்காட்சிகளை படமாக்கினோம். ஆனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அது நிச்சயம் விமர்சனத்துக்கு ஆளாகும் என பலரும் கருதியதால், அதை படத்திலிருந்து தூக்கிவிட்டு, வேறு மாதிரியாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கினோம் என்று கூறியுள்ளார்.




