தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை துவங்கி மீண்டும் லாக் டவுன் போடப்படும் என திரையுலகில் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனாலேயே இயக்குனர்கள் பலரும் விரைந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் விதமான கதைகளுக்கு முன்னுரிமை தந்து உள்ளூர்களிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அப்படி குறுகியகால தயாரிப்பாக உருவாகியுள்ள ஒரு படம் தான் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள 'பகலும் பாதிராவும்'.
மலையாளத்தில் ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ், ஷைலாக் என மம்முட்டி நடித்த படங்களையே தொடர்ந்து இயக்கிவந்த அவரது ஆஸ்தான இயக்குனர், அஜய் வாசுதேவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. கடந்த டிச-8ஆம் தேதி தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை வெறும் பத்தே நாட்களில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வாசுதேவ். ஆச்சர்யமான விஷயம் தான்.