ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் பெய்த கன மழை ஆந்திர மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 30 பேருக்கு மேல் உயிர்பலி ஆகியிருக்கிறார்கள்.
ஆந்திர மாநில அரசு மக்களிடம் வெள்ள நிவாரண நிதி திரட்டி வருகிறது. தெலுங்கு ஹீரோக்கள் வெள்ள நிவாரண உதவிகளை போட்டி போட்டு அறிவித்து வருகிறார்கள். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அவரது மகன் ராம்சரணும் தலா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோல ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாவும் தலா 25 லட்சம் அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து பல நடிகர்கள் தங்கள் சக்திகேற்ப நிவாரண தொகையை அறிவித்து வருகிறார்கள். நிவாரண உதவிகள் வழங்கிய ஹீரோக்கள் ஆந்திர மக்களின் நிலை கண்டு மனம் நெகிழ்வதாகவும் இந்த நேரத்தில் அரசுக்கு அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.




