ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
பழம்பெரும் தெலுங்கு பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரி. 37 ஆண்டுகளுகாக தெலுங்கு திரைப்படங்களுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 66 வயதான சீதாராம சாஸ்திரி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார்.
கே.விஸ்வநாத் இயக்கிய ஜனனி ஜன்மபூமி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து பாடல்கள் எழுதி வந்தார். கடைசியாக எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாடல் எழுதினார். பல்வேறு மாநில விருது பெற்ற அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சீதாராம சாஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் சிரிவென்னேலா சீதாராம சாஸ்திரி. அவரது மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. கவிதை மற்றும் பன்முகத்தன்மை அவரது எழுத்துக்களில் வெளிப்படும். தெலுங்கு மொழியின் புகழுக்காக கடுமையாக உழைத்தார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.