டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
பிரபல மலையாள பாடலாசிரியர் பிச்சு திருமலா இன்று(நவ., 26) காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில வாரங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பிச்சு திருமலா கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் நாட்களை நகர்த்தி வந்தார்.
1972ல் பஜகோவிந்தம் என்கிற மலையாள படத்தின் மூலம் பாடலாசிரியாக நுழைந்த இவர் சுமார் நானூறு படங்களில் பணியாற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இரண்டுமுறை கேரளா அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசையிலும் பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரே படமான யோதாவில் இவர் பாடல் எழுதியுள்ளார். மேலும் மோகன்லால் அறிமுகமான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது இவர் தான்.