ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

வளர்ந்து வரும் கன்னட நடிகை பாவனா கவுடா. தற்போது கன்டிகா, கவுலி, மெஹபூபா, மைசூரு டைரிஸ், பைட்டர், தூதுமதிகே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன். இந்த படம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டுத் தனிமையில் மாட்டிக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் பிரச்னைகளை பேசுகிறது. பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. படிகர் தேவேந்திரா இயக்குகிறார். பரத் நாயக் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி பாவனா கூறியதாவது : அனைவரின் வாழ்க்கையிலும் லாக்டவுன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரில் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் தனது கனவுகளைத் துரத்துவதையும், இரண்டு மாத லாக்டவுனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் காட்டும் படம் இது. இது லாக்டவுனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் போன ஒவ்வொரு பெண்ணின் வலியையும் பிரதிபலிக்கும். என்கிறார்.




