வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
வளர்ந்து வரும் கன்னட நடிகை பாவனா கவுடா. தற்போது கன்டிகா, கவுலி, மெஹபூபா, மைசூரு டைரிஸ், பைட்டர், தூதுமதிகே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன். இந்த படம் கொரோனா ஊரடங்கின் போது வீட்டுத் தனிமையில் மாட்டிக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் பிரச்னைகளை பேசுகிறது. பெங்களூரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. படிகர் தேவேந்திரா இயக்குகிறார். பரத் நாயக் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி பாவனா கூறியதாவது : அனைவரின் வாழ்க்கையிலும் லாக்டவுன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெங்களூரில் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் தனது கனவுகளைத் துரத்துவதையும், இரண்டு மாத லாக்டவுனை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் காட்டும் படம் இது. இது லாக்டவுனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் போன ஒவ்வொரு பெண்ணின் வலியையும் பிரதிபலிக்கும். என்கிறார்.