எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் நடிகர் பிரித்விராஜ் படங்களே அதிகம். அது மட்டுமல்ல தற்போது அதிக படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் அவர் நடித்துள்ள ஜனகணமன என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் நடித்து வந்த விலாயுத் புத்தா என்கிற படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப்படம் இந்துகோபன் என்பவர் எழுதிய விலாயுத் புத்தா என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் பாஸ்கரன் பிள்ளை என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு நபர்களுக்கான ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. அந்தவகையில் பிரித்விராஜூக்கு இந்த ஈகோ யுத்தம் சென்டிமென்ட் இந்த படத்திலும் கைகொடுக்கும் என நம்பலாம்.