புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான படம் குரூப். இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். இந்த படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் முடிந்த பிறகு சுகுமார குரூப்பின் குடும்பத்திற்கு போட்டுக்காட்டி அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் சுகுமார குரூப்பின் தனியுரிமையை பாதிக்கிறது, அவரது குடும்பத்தினர் இந்த படத்தை விரும்பவில்லை எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது, என்றாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் இண்டர்போலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.