புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. அதேசமயம் இந்தப்படத்தின் ஒரிஜினலான ஹிந்தியில் கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தான் நழுவ விட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தற்போது கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்ட துல்கர் சல்மானுக்கு அந்தாதுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்த சமயத்தில் சரியான தகவல் தொடர்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படாததால் அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து கைநழுவிப் போனது என தற்போது ஒரு பேட்டியில் துல்கர் சல்மான் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் துல்கர் சல்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.