துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. அதேசமயம் இந்தப்படத்தின் ஒரிஜினலான ஹிந்தியில் கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தான் நழுவ விட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தற்போது கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்ட துல்கர் சல்மானுக்கு அந்தாதுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்த சமயத்தில் சரியான தகவல் தொடர்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படாததால் அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து கைநழுவிப் போனது என தற்போது ஒரு பேட்டியில் துல்கர் சல்மான் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் துல்கர் சல்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.