திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து நடிக்க வைத்திருந்தார் பிரித்விராஜ். விவேக் ஓபராய்க்கும் இந்தப் படம் பெரிய பெயர் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் வில்லனாகவே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் விவேக் ஓபராய். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தற்போது பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து வரும் கடுவா என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். இந்த படத்தில் காட்டு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க அவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்படும் காட்டிலாகா அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார் இதை குறிப்பிடும் விதமாக "வேட்டைக்காரன் வந்துவிட்டான்.. எச்சரிக்கையாக இரு கடுவா.. இன்று முதல் ஆக்சன் ஆரம்பம்" என்று குறிப்பிட்டு படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.