ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
பிரபல தெலுங்கு நடிகர் நாக சவுர்யாவின் தந்தை சிவலிங்க பிரசாத். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் ஐதராபாத் அருகே உள்ள மஞ்சிரேவு பகுதியில் ஒரு பண்ணை வீட்டை படப்பிடிப்புக்காக என்று சொல்லி குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டை படப்பிடிப்புக்கு பயன்படுத்தாமல் சூதாட்டம் நடத்த பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிவலிங்க பிரசாத், குத்தகை நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பண்ணை வீட்டில் கடந்த அக்டோபர் 31ம் தேதி போலீஸார் சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீராம் பத்ரய்யா உள்பட 30 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.