25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? |
சாகுந்தலம் படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிப்பவர் புதிய படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார். சமந்தா ஹிந்தி படங்களில் இதுவரை நடிக்காத போதும் அவர் நடித்த பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்ததொடர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், பேமிலிமேன்-2 தொடரில் சமந்தா மிகச்சிறப்பாக நடித்திருந்ததாகவும், அவரது கேரக்டரை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்திருப்பவர், அவருடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷாகித் கபூர் தற்போது பேமிலிமேன்-2 தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார்.