புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலிலில் தங்கம் வென்று தங்க மகனாக திரும்பி இருக்கிறார் நீரஜ் சோப்ரா. தற்போது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, தனது பயோபிக் சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் எனது கேரக்டரில் அக்ஷய் குமாரோ, ரந்தீப் ஹூடாவோ நடிக்க வேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற பிறகு பயோபிக்க எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து அவரை பாராட்டிய அக்ஷய்குமார், "100 கோடி இந்தியர்களின் ஆனந்த கண்ணீருக்கு நீங்கள் தான் பொறுப்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய்குமார், நான் நீரஜின் பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன். நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.