பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலிலில் தங்கம் வென்று தங்க மகனாக திரும்பி இருக்கிறார் நீரஜ் சோப்ரா. தற்போது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, தனது பயோபிக் சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் எனது கேரக்டரில் அக்ஷய் குமாரோ, ரந்தீப் ஹூடாவோ நடிக்க வேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற பிறகு பயோபிக்க எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து அவரை பாராட்டிய அக்ஷய்குமார், "100 கோடி இந்தியர்களின் ஆனந்த கண்ணீருக்கு நீங்கள் தான் பொறுப்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய்குமார், நான் நீரஜின் பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன். நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.