எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலிலில் தங்கம் வென்று தங்க மகனாக திரும்பி இருக்கிறார் நீரஜ் சோப்ரா. தற்போது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, தனது பயோபிக் சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் எனது கேரக்டரில் அக்ஷய் குமாரோ, ரந்தீப் ஹூடாவோ நடிக்க வேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற பிறகு பயோபிக்க எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து அவரை பாராட்டிய அக்ஷய்குமார், "100 கோடி இந்தியர்களின் ஆனந்த கண்ணீருக்கு நீங்கள் தான் பொறுப்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய்குமார், நான் நீரஜின் பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன். நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.