'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு |
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலிலில் தங்கம் வென்று தங்க மகனாக திரும்பி இருக்கிறார் நீரஜ் சோப்ரா. தற்போது அவரை பற்றிய செய்திகள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நீரஜ் சோப்ரா, தனது பயோபிக் சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் எனது கேரக்டரில் அக்ஷய் குமாரோ, ரந்தீப் ஹூடாவோ நடிக்க வேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற பிறகு பயோபிக்க எடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை தொடர்ந்து அவரை பாராட்டிய அக்ஷய்குமார், "100 கோடி இந்தியர்களின் ஆனந்த கண்ணீருக்கு நீங்கள் தான் பொறுப்பு" என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் நீங்கள் நடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் கேட்டு வந்தார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய்குமார், நான் நீரஜின் பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன். நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.