Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மோசடி வழக்கில் தாயாருடன் சிக்கிய ஷில்பா ஷெட்டி

10 ஆக, 2021 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Shilpa-shetty-and-her-mother

பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் இருவர் மீது புதிதாக மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா இருவர் மீதும் 2 தனித்தனி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷில்பா ஷெட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் 'லோசிஸ் வெல்னஸ் சென்டர்' என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்(உடற்பயிற்சி மையம்)களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு அந்த தொழிலை மூடிவிட்டார். லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோகித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவும் இல்லை, அதோடு ஷில்பாஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஷில்பா ஷெட்டி நடத்திய அந்த நிறுவனத்தில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக லக்னோ கிழக்கு பகுதி டிஜிபி சஞ்சீவ் அளித்த பேட்டியில், ''நடிகை ஷில்பா, அவரின் தாயாரிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பை செல்ல இருக்கிறார். இவ்வழக்கு அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்படும். முக்கிய பிரமுகர் இவ்வழக்கில் தொடர்பு கொண்டு இருப்பதால் விசாரணை தீவிரமாக கவனிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மன அழுத்தத்தால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சந்தானம் ஹீரோயின்மன அழுத்தத்தால் படப்பிடிப்பில் ... குணசித்ர, வில்லன் நடிகர் அனுபம் ஷ்யாம் காலமானார் குணசித்ர, வில்லன் நடிகர் அனுபம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in