தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்குவது என்பதே ஒரு சாதனை தான். பல சர்ச்சைகளுக்கு இடையே அதை சாதித்த இயக்குனர் அட்லீக்கு அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோக்கள் கிடைக்கவில்லையா, அல்லது பாலிவுட் லெவலுக்கு உயர பறக்கவேண்டும் என ஆசைப்பட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆக.,15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. இது தொடர்பாக அட்லீ ஷாருக்கானை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது, அதை உறுதிப்படுத்துவது போல அட்லீ அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.