படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தொடர்ந்து விஜய்யை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்குவது என்பதே ஒரு சாதனை தான். பல சர்ச்சைகளுக்கு இடையே அதை சாதித்த இயக்குனர் அட்லீக்கு அடுத்ததாக கோலிவுட்டில் ஹீரோக்கள் கிடைக்கவில்லையா, அல்லது பாலிவுட் லெவலுக்கு உயர பறக்கவேண்டும் என ஆசைப்பட்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்தப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆக.,15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட இருக்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்துள்ளது. இது தொடர்பாக அட்லீ ஷாருக்கானை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது, அதை உறுதிப்படுத்துவது போல அட்லீ அவரது மனைவி பிரியா இருவரும் ஷாருக்கானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.