தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ, அதையடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக சொல்லி, கடந்த பல மாதங்களாகவே ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார் அட்லீ. இந்நிலையில் இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பதாக கூறப்படும் நிலையில் கமலின் விக்ரம் படம் போன்று இப்படத்தின் அறிமுக டீசரை இம்மாதம் 15-ந்தேதி வெளியிட அட்லீ திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.