ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் என்று அறியப்பட்டாலும் இந்தியாவில் ஒரு கிராமத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர் சன்னி லியோன். அவர் எங்கு சென்றாலும் அவரைக் காண அப்படி ஒரு கூட்டம் கூடும்.
கனடாவில் பிறந்தவரான சன்னி லியோன் அமெரிக்க குடியுரிமையையும் உடையவர். இந்தியாவிலும் பல மாதங்கள் தங்கியிருப்பார். தற்போதும் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சன்னி லியோன் மும்பையில் புதிய வீட்டில் குடிபெயர்ந்துள்ளார்.
புதிய வீட்டில் தனது கணவர், குழந்தைகளுடன் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இந்தியாவில் எங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பம். இங்கு நாங்கள் கட்டியுள்ள புதிய வீடும், எங்களது வாழ்க்கையையும் நேசிக்கிறேன். எங்களது அழகான மூன்று குழந்தைகளால் கேக் மீதுள்ள ஐஸ் போல இருக்கிறது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
முதல் குழந்தையைத் தத்தெடுத்த சன்னி லியோன் அதன்பின் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தாயானார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திலும் சன்னிக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது.