ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கிரிக்கெட் பற்றியோ, கிரிக்கெட் வீரர்கள் பற்றியோ படம் எடுத்தால் மினிமம் கியாரண்டி என்கிற நிலை ஹிந்தி படங்களுக்கு இப்போது இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாகி உள்ள 83 என்ற படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. பல ஆண்டுகளாக யூக செய்தியாக உலவிக் கொண்டிருந்த இதனை கங்குலி இப்போது உறுதி செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் "எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார்கள். இப்போது அதற்கு அனுமதி அளித்திருக்கிறேன். அது ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்பதை படம் எடுப்பவர்கள் அறிவிப்பது தான் முறையானது. அதற்கு சில நாட்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் தயாராகி வருகிறார் என்றும், 250 கோடி பட்ஜெட்டில் இப்பட தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.