பிளாஷ்பேக் : பிரபு, கார்த்திக் நடிக்க மறுத்த படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : உலக போர், சென்னை மாகாணத்தை கிண்டல் செய்த படம் | ஒரு இடைவெளிக்குத் தயாராகும் தமிழ் சினிமா | 'டிராகன்' படத்தில் ஐந்து இயக்குனர்கள் | அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள் | சிரஞ்சீவிக்கு 'யுகே' பார்லிமென்ட்டில் பாராட்டு | ஹிந்தி படப்பிடிப்பில் ஹோலி கொண்டாடிய தனுஷ் | 'லியோ' கதைதான் 'குட் பேட் அக்லி' கதையா? | 60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் |
சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் நிஜத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் சோனுசூட். காரணம் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணிகள். கொரோனா முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது அலையில் ஆக்சிஜன் வங்கிகளை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறார். இதுதவிர ஏராளமான உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் திடீரென முட்டை, ரொட்டி விற்கும் வியாபாரத்தில் இறங்கி விட்டார். தனது வீட்டில் தினமும் சைக்கிளில் முட்டை மற்றும் பிரட்டுகளை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக சென்று விற்று வருகிறார். மற்ற பணிகள் எல்லாம் சரி. இது விளம்பரத்துக்காக செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.
அவர் தரும் விளக்கம் இது: இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறேன். அதைவிட முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற சிறுசிறு வியாபாரத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு அவர்களுக்கு தயக்கமோ, வெட்கமோ இருக்ககூடாது என்பதற்காக நானே முன்மாதிரியாக இருந்து செய்து காட்டுகிறேன். என்கிறார் சோனுசூட்.