ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி இந்தி முழுக்க பிரபலமான தொடர் மகாபாரதம். இந்த தொடரில் இந்திரன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பழம்பெரும் நடிகர் சதீஷ் கவுல். அதன் பிறகு விக்ரம் அவுர் பேட்டால் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். 'பியார் தோ ஹோனா ஹை தா' மற்றும் 'ஆன்ட்டி நம்பர் ஒன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பஞ்சாபி மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
74 வயதான சதீஷ் கவுலுக்கு கடந்த 8ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், பஞ்சாப்பின் லூதியானா நகரில் உள்ள பகவான் ராம் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.