பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கெனவே ராணி லட்சுமிபாய் பயோபிக்கான மணிகர்னிகாவில் நடித்தார். தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். டிட்டாவின் கதை என்னிடம் உள்ளது. அந்த கதையை தெரிந்து கொண்டு அதை கங்கனா சினமாவாக்க முயற்சிப்பதாக பிரபல இந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கங்கனா மீது கதை திருட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். என்கிறார்.