புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஆமீர்கான் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். சில முக்கிய பிரபலங்களுக்கு அதற்காக நன்றி தெரிவித்த ஆமீர் பின்னர் டுவிட்டரை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.
“எனது பிறந்தநாளில் அன்பையும், பாசத்தையும் காட்டிய அனைவருக்கும் நன்றி. எனது இதயம் நிறைந்தது. மற்றுமொரு முக்கியமான செய்தி. சமூக வலைத்தளத்தில் இதுதான் என்னுடைய கடைசி பதிவு. ஆனாலும், நான் ஆக்டிவ்வாகத்தான் இருப்பேன். இதற்கு முன்பு எப்படி தொடர்பு கொண்டோமோ அப்படியே தொடர்பு கொள்வோம். கூடுதலாக வேறொரு கணக்கை எனது தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதனால் என்னைப் பற்றியும் எனது படங்களைப் பற்றியும் அதில் பார்க்கலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆமீர் நேற்று விலகிய அவருடைய டுவிட்டர் கணக்கில் 2 கோடியே 67 லட்சம் பாலோயர்கள் இருந்தார்கள். அந்தக் கணக்கை அப்படியே டெலிட் செய்துவிட்டார்கள். புதிதாக அவரது தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 5 ஆயிரம் பாலோயர்கள் மட்டுமே பின் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.