துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றி துணிச்சலுடன் கருத்து கூறுகிறவர். டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் சில கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்த கருத்து இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி சய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரை ஜனவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கங்கனா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம் கங்கனாவுக்கு புதிதாக சம்மன் அனுப்பக் கூடாதென காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதோடு தேசத் துரோக வழக்கில் கங்கனா ரணவத்தை வருகிற 25ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது.