புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை டுவிட்டரில் 45 மில்லியன் பாலோயர்கள் பின் தொடர்கின்றனர். அவரது இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகை ஜாஸ்மின் என்பவர் அமிதாப்பின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் அந்தப் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப், “டுவிட்டரும், ரசிகர் ஜாஸ்மினும் 45 மில்லியன் பாலோயர்கள் வந்திருப்பதற்கு இந்த புகைப்படம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. ஆனால், அதற்குமேலான நினைவுகள் இந்தப் புகைப்படத்தில் பொதிந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்தில் சிக்கினார் அமிதாப். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பிற்கு மூன்றுக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டது. அப்போது அவருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் கல்லீரல் நோய் அமிதாப்பிற்கு ஏற்பட்டது. இன்றளவும் அந்தப் பிரச்சினையால் உடல்நலப் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறார் அமிதாப்.
அப்போது மருத்துவமனையில் இருந்து திரும்பிய அமிதாப்பை பார்க்க வந்த அவரது தந்தை கண்ணீர் விட்டு அழுதார். அவரது காலில் விழுந்து அமிதாப் ஆசி பெற்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தான் ஜாஸ்மின் தற்போது பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.