தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் | 50 ஆண்டு சினிமா பயணம் : ரஜினிக்கு அந்த ஒரு ஏக்கம் மட்டுமே...! | ராம் சரணின் அலைப்பேசி எண்ணை அவர் மனைவி எப்படி பதிந்து வைத்துள்ளார் தெரியுமா? |
நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதா ப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் திரைக்கு வந்து தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அது குறித்த ஒரு போட்டோவை அப்படத்தை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதை மறுபதிவு செய்துள்ளார் நடிகர் அமிதாப்பச்சன். அதோடு ஒரு பதிவும் வெளியிட்டுள்ளார்.
அதில், இப்படி ஒரு சிறந்த படத்தில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. வைஜெயந்தி பிலிம்ஸின் பெரியோர்களின் ஆசிகள் மறக்க முடியாது. அவர்கள் மீண்டும் எப்போது அழைத்தாலும் இந்த பிராஜெக்ட்டில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபாஸ் கர்ணன் வேடத்திலும், அமிதாப்பச்சன் அஸ்வத்தாமன் வேடத்திலும் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரங்கள் குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளுக்கான விடை கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.