ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் |
சமீபத்தில் ஒரு பாலிவுட் சேனலுக்காக தயாரிப்பாளர்கள் போனி கபூர், நாகவம்சி மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் ஆகியோர் பங்குபெற்ற ஒரு விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போனி கபூர் பேசும்போது, “பாலிவுட்டை பொறுத்தவரை ஒரு புதுமுகமாக வந்த கமல்ஹாசன் 'ஏக் துஜே கேலியே' படத்தின் மூலம் மிகப்பெரிய நடிகராக இங்கே அந்தஸ்து பெற்றார். இத்தனைக்கும் ஒரு தென்னிந்திய இயக்குனரான பாலச்சந்தர் தான் அந்த படத்தை இங்கே இயக்கியிருந்தார்” எனக் கூறினார்.
அப்போது இடைமறித்த சித்தார்த், “அதே சூழ்நிலை இப்போது இருக்கிறது என்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு போனி கபூர், “ஏன் இல்லை ? இதோ இப்போது ஜூனியர் என்டிஆர், ஆதித்யா ராய் கபூரின் 'வார் 2' படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறாரே” என்று கூறினார். உடனே தயாரிப்பாளர் நாகவம்சி, “ஜூனியர் என்டிஆர் ஒன்றும் புதுமுகம் அல்ல” என்று உடனே பதில் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து சித்தார்த்தும் போனி கபூரிடம், “நீங்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா? இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்து வருபவருமான ஒருவரை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
அதாவது ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டுக்கு புதுமுகம் அல்ல, ஏற்கனவே தெரிந்த முகம் தான் என்றும், ஆனால் ஒரு சாதாரண தென்னிந்திய நடிகருக்கு பாலிவுட்டில் நுழைந்து இப்போது ஜெயிக்க முடியுமா என்கிற கேள்வி தான் சித்தார்த் கேட்டது. அது இப்படி சூடான விவாதமாக மாறி பின்னர் அப்படியே வேறு பக்கம் திரும்பி விட்டது.