எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை நடிகை சன்னி லியோனுக்கும் கொடுக்கப்பட்டு வரும் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சன்னி லியோனுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டுமா? அதுவும் சன்னி லியோன் கனடா நாட்டைச் சேர்ந்தவர் . அவருக்கு எதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது என்று சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் இதை ஆராய தொடங்கினர். அப்போதுதான் நடிகை சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, எந்தெந்த அதிகாரிகள் மூலமாக இப்படி இன்னொருவரின் பெயரில் அவர் உதவி தொகை பெற்று வருகிறார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .