32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
நடிகை கத்ரீனா கைப் பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் . இவர் தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி உடன் 'மல்லிஸ்வரி' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார்.
இப்போது சமீபத்தில் கத்ரீனா கைப் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "தற்போது சினிமாவில் கதாநாயகிகள் பலரும் டாக்டர், இன்ஜினியரிங் அல்லது ஏதாவது டிகிரி படிப்புடன் உள்ளார்கள். நானும், நடிகையாகும் ஆரம்ப காலத்தில் படிப்பு இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியுமா என எண்ணினேன். ஆனால், படிப்பு முக்கியமில்லை. திறமை தான் முக்கியம். பத்தாம் வகுப்பு பெயில், நான் இன்றும் முன்னனி நடிகையாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கத்ரீனா கைப் சினிமாவில் ரூ.25 கோடி வரை சம்பளமாக பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.