எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
ஹிந்தியில் அனில் ஷர்மா இயக்கத்தில், நடிகர் நானா படேகர் நடித்துள்ள படம் 'வான்வாஸ்'. டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் நானா படேகர் கூறுகையில், ''வான்வாஸ் திரைப்படம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படமாக இருக்கும். தந்தையே உயர்ந்தவர் என்று போற்றும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரக்கூடிய வகையிலான இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு தந்தையும், கண்டிப்பான தனது மகன்களையும் படத்தை பார்க்க சொல்வார்கள். அந்தளவிற்கு இன்றைய காலக்கட்டத்திற்கேற்ற உணர்வுபூர்வமான திரைப்படம் இது.
அனில் சர்மா, புத்திசாலியான அற்புதமான இயக்குனர். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் என்னுடைய சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். 'காதர் 2' படத்திற்கு பிறகு அனில் எனக்கு ஒரு ஆக்ஷன் படத்தை கொடுப்பார் என நினைத்தேன். ஆனால், சிறந்த குடும்பப் படத்தை வழங்கியுள்ளார்.
நான் எனக்கென சொந்த விதிமுறைகளை வகுத்து வேலை செய்கிறேன். அதாவது, முதலில் எனக்கு அருமையான ஸ்கிரிப்ட் இருக்க வேண்டும், பிறகு படப்பிடிப்பு தொடங்கும் முன் ரெடி ஸ்கிரிப்ட் வேண்டும். இது தவிர, எனக்கு நல்ல ஊதியம் வேண்டும், நான் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதில்லை. எனது எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்பவர்களுடன் நான் வேலை செய்கிறேன். இது தவிர, என்னை ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்களிடம், என்னை ஏன் இந்த படத்திற்கு தேர்வு செய்தீர்கள் என கேட்பேன்'' என்றார்.