இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் என் மரணம் இப்படித்தான் நிகழ வேண்டும் என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவரது ரசிகர்கள் துடிதுடித்து போய் இப்படியெல்லாம் பேசாதீர்கள் என்கிற ரேன்ஞ்சில் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கானிடம், 'நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?' என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஷாருக்கான் பதிலளிக்கையில், “நிச்சயமாக. நான் மரணம் அடையும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். 'ஆக்ஷன்', 'கட்' என்ற சொற்கள் சாகும்வரை எனக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நான் இறப்பது போல் நடிக்கும் காட்சியில் இயக்குனர் 'ஆக்ஷன்' என்று சொல்ல வேண்டும். நான் இறப்பது போன்று நடிப்பேன். இயக்குனர் 'கட்' என்று சொன்ன பிறகு நான் எழுந்திருக்க கூடாது. நிஜமாகவே இறந்திருக்க வேண்டும். உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை நான் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எனது வாழ்நாள் கனவு” என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பதில் அனைவரையுமே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.