24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் |
சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், மாண்டி தொகுதியில் எம்.பி. ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்கனா ரணாவத்தை ஒரு பெண் சிஐஎஸ்எப் அதிகாரி கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் தான் நலமாக உள்ளதாக கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் தாக்கப்பட்டது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத பாலிவுட் மீது கங்கனா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஒரு பதிவிட்டிருந்தார். ஆனால், அதை பின்னர் டெலிட் செய்துவிட்டார். இருந்தாலும் அவரது பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த பலர் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
கங்கனா தாக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டுமே கங்கனா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு செய்துள்ளார்.