16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் |
உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா. அங்கு நடைபெறும் விழாவில் எப்போதுமே கலந்து கொள்பவர் ஐஸ்வர்யா ராய். அதற்காக நேற்று மும்பை விமான நிலையத்திற்கு தனது மகள் ஆராத்யாவுடன் வந்தார்.
அப்போது அவரது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. எதனால் அந்த காயம் ஏற்பட்டு கட்டு போடப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்த கட்டுடனேயே அவர் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டுச் சென்றுள்ளார்.
காயம் ஏற்பட்ட நிலையிலும் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யாவின் ஆர்வத்தை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 'பொன்னியின் செல்வன் 2' படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
மே 14ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது.