அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பாலிவுட் நடிகர் சஹில் கான் 'தி லயன் புக் ஆப்' என்ற பந்தய செயலி வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இது மகாதேவ் பந்தய செயலி நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும். இந்த வழக்கில் மும்பை போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அவரிடம் விசாரணை நடத்தியது. மேலும், சாஹில் கான் 'தி லோட்டஸ் புக் ஆப்'-ல் பங்குதாரராகவும் உள்ளார். அந்த செயலியின் விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சாஹில் கானின் ஜாமின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சாஹில் கானை சுமார் 40 மணிநேரமாக தேடிய மும்பை போலீஸ் சைபர் செல் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று கைது செய்தது. சத்தீஸ்கரில் உள்ள ஜக்தல்பூரில் பிடிபட்ட அவர் மீண்டும் மும்பைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.