மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வட இந்திய திருத்தலங்களில் இந்து மக்கள் அதிகமாக வந்து வழிபடும் ஒரு கோயிலாக ராமர் கோயில் உள்ளது. அயோத்தியில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இடங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் 'த சரயு என்கிளேவ்' என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் கோயிலில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும், அயோத்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவிலும் அந்த இடம் அமைந்துள்ளதாம்.
இது மட்டுமல்லாமல் மும்பை, அலிபாக் பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை 10 கோடிக்கு வாங்கியுள்ளார் என்றும் சொல்கிறார்கள். அந்த இடத்தில் சில நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே இடங்களை வாங்கியுள்ளார்களாம். அலிபாக் என்பது தீவுப் பகுதி. அங்கு அமிதாப் விரைவில் பார்ம் அவுஸ் ஒன்றை கட்டப் போகிறாராம்.