'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்' என்ற பெயரில் ஹிந்தியில் படமாக உருவாகிறது. ரன்தீப் ஹூடா இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தை ரன்தீப் ஹூடா பிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. டிரைலரில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பை கிளப்பி உள்ளது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்ற பின்னணி குரலோடு தொடங்கும் டிரைலரில் அந்தமான் சிறையில் வீர் சாவர்க்கர் துன்புறுத்தப்படும் காட்சிகள் இடம்பெறுகிறது. "வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இந்த கருத்துகளும், காட்சிகளும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒருநாளில் இந்த டிரைலர் கிட்டத்தட்ட 80 லட்சம் பார்வைகளை நெருங்கி உள்ளது.