இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சமீப நாட்களாக விமான பயணங்களில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து திரையரங்க பிரபலங்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு விமான பயணம் அல்ல, அதற்கு முன்னதாக விமான நிலையத்தில் ஏற்பட்ட அனுபவமே மிகப்பெரிய கசப்பணர்வை கொடுத்துள்ளது. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ராதிகா ஆப்தே, சமீபத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்வதற்காக வந்தார் ராதிகா ஆப்தே,
அதே சமயம் விமான நிலைய ஊழியர்கள் சிலர் விமான நடை மேம்பாலத்தில் ராதிகா ஆப்தே உள்ளிட்ட இன்னும் பல பயணிகளை அமரும்படி வற்புறுத்தி இரண்டு பக்க கதவுகளையும் அடைத்து விட்டனர். 8:30 மணிக்கு கிளம்ப வேண்டிய அவரது விமானம் 10:30 மணியாகியும் கிளம்புகின்ற அறிகுறியும் தெரியவில்லை. அதற்கு காரணங்களும் சொல்லப்படாமல் நடை மேம்பாலத்திலேயே கிட்டத்தட்ட சிறைபிடிக்க பட்டது போன்று ராதிகா ஆப்தேவும் இன்னும் சில பயணிகளும் அடைத்து வைக்கப்பட்டனர்.
விமான நிலைய ஊழியர்களும் அது குறித்த தெளிவான தகவலை தெரிவிக்கவில்லை. இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா ஆப்தே நிச்சயம் இது வேடிக்கையான அனுபவம் தான் என்று விரக்தியுடன் கூறியுள்ளார். அதன் பிறகு நிலைமை சீராகி விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராதிகா ஆப்தே.