கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
கடந்த 2014ல் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான படம் ‛1 - நேனொக்கடினே'. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்தப் படம் கமர்சியல் ஆக்ஷன் படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிர்த்தி சனோன் இந்த படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் வெளியாகி தற்போது பத்தாம் வருடத்தை தொட்டுள்ளது. படம் மட்டுமல்ல நாயகி கிர்த்தி சனோனுக்கும் இது வெற்றிகரமான பத்தாவது ஆண்டும் கூட.
மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இந்த படத்தின் அருமை பெருமைகளை பத்தாம் வருடம் கொண்டாட்டமாக சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் நடிகை கிர்த்தி சனோனும் திரையுலகில் தான் பத்து வருடங்களை கடந்துள்ளது குறித்தும் இந்த படம் குறித்தும் நெகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது, 'நான் சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் ஆயிற்று என்பதை நம்பவே முடியவில்லை. எனது முதல் படமே சூப்பர் ஸ்டார் ஆன உங்களுடன் தான் மகேஷ் பாபு சார்.. பல விஷயங்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் இருக்கின்றன. அதன்பிறகு பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தபோது எவ்வளவோ விஷயங்கள் மாறி இருந்தாலும் நீங்கள் அப்படியே தான் இருக்கிறீர்கள். நினைவில் வைத்திருக்க கூடிய பல அற்புதமான நிகழ்வுகளையும் கொடுத்ததற்காக உங்களுக்கும் நன்றி சுகுமார் சார்” என்று கூறியுள்ளார்.