தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் உடல் பாதிப்பு அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில்வே ஊழியர்கள் சிலர் சாதுர்யமாக செயல்பட்டதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர். உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட அந்த ரயில்வே ஊழியர்களை பற்றி உருவாகி உள்ள தொடர் 'தி ரெயில்வே மேன்'.
இந்த தொடரில் மாதவன், கே.கே.மேனன் திவ்யேந்து சர்மா, பபில்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவ் ராவில் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. தற்போது நாளை மறுநாள் (18ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.