ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தனுஸ்ரீ பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறியதை தொடர்ந்து மீடூ புகாருக்கு ஆளான நடிகர்கள் சார்பில் ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தனுஸ்ரீ மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது “கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் 'மீடூ' புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.