மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் என தகவல் வெளியானது. என்னை சுற்றி போர் நடக்கிறது. நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அவரும் தகவல் அனுப்பினார். நஸ்ரத் பரூச்சாவை பத்திரமாக மீட்டு இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை அவரது உறவினர்களும், நண்பர்களும் மேற்கொண்டு மத்திய அரசின் உதவியையும் நாடினர்.
இந்நிலையில், நஸ்ரத் பரூச்சா மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும், இஸ்ரேல் பகுதியில் இருந்து வெளியேற அங்குள்ள விமான நிலையத்தை நஸ்ரத் பரூச்சா அடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் அவர் மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தூதரகத்தின் உதவியுடன் நஸ்ரத் பரூச்சா அவரது வீட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார் என்றும் கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கி இருக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று அவர் பத்திரமாக நாடு திரும்பினார். மும்பை விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.