‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் நடித்து ராமாயணத்தைத் தழுவி எடுத்த 'ஆதி புருஷ்' படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பெற்றது. நாம் இதற்கு முன் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் பார்த்த ராமாயணத்திற்கும் 'ஆதி புருஷ்' படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அந்தக் காவியத்தின் உண்மைத் தன்மையை படக்குழுவினர் கெடுத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஹிந்தியில் பிரபல இயக்குனரான நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் மற்றும் பலர் நடிக்க ராமாயணக் காவியத்தை அப்படியே படமாக்க திட்டமிட்டுள்ளனர். அந்தக் காவியத்தின் தன்மை சிறிதும் குலையாமல் அந்தப் பழமையுடனும், கலாச்சாரத்துடனும் படமாக்கவே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்தையும் முன்கூட்டியே சரியாகத் திட்டமிட்டு படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.
விரைவில் படக்குழுவினர் டெஸ்ட் ஷுட் ஒன்றையும் நடத்தப் போகிறார்களாம். அதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், யஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் ஷுட்டிற்காகவே மும்பையில் தனியாக ஒரு அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். டெஸ்ட் ஷுட் முடிந்து அது திருப்தியான பிறகே அடுத்த கட்ட அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்கிறார்கள். பாலிவுட்டின் மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இந்த 'ராமாயணம்' உருவாக உள்ளது.