படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம் தமிழ், இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக பூஜா ஹெட்டே நடிக்கிறார். இதற்கு முன்பு ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான பிளடி டாடி என்கிற படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம் ஷாகித் கபூர்.
ஆனால் தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்திற்காக 15 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டாராம் ஷாகித். அதற்கு காரணம் இது குறுகிய கால தயாரிப்பாக உருவாவதாலும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது ஷாகித் கொண்டிருந்த மரியாதையாலும் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.