சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இப்படிப்பட்ட படங்களைத்தான் இவர் இயக்குவார் என ஒரு வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் மோகன்லால் நடித்த உதயநாணுதாரம், பிரித்விராஜ் நடித்த மும்பை போலீஸ், நிவின்பாலி நடித்த வரலாற்று படமான காயங்குளம் கொச்சுண்ணி மற்றும் மலையாளத்தில் மஞ்சு வாரியருக்கும், தமிழில் ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான மறு பிரவேசத்துக்கு வழிவகுத்த ஹவ் ஓல்ட் ஆர் யூ (தமிழில் 36 வயதினிலே) என விதவிதமான ஜானர்களில் படங்களை இவர் இயக்கி உள்ளார்.
இந்தநிலையில் மலையாளம் தமிழ், இரண்டு மொழிகளையும் தாண்டி முதன்முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். இந்தியில் அவர் இயக்கும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக பூஜா ஹெட்டே நடிக்கிறார். இதற்கு முன்பு ஷாகித் கபூர் நடிப்பில் வெளியான பிளடி டாடி என்கிற படம் வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்திற்கு 40 கோடி சம்பளம் வாங்கி இருந்தாராம் ஷாகித் கபூர்.
ஆனால் தற்போது ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்திற்காக 15 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 25 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டாராம் ஷாகித். அதற்கு காரணம் இது குறுகிய கால தயாரிப்பாக உருவாவதாலும் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மீது ஷாகித் கொண்டிருந்த மரியாதையாலும் தான் என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தில்.