பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கோல்கட்டாவில் உள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஷிவானிக்கு நேற்று முன்தினம் செல்போனில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போனில் வீடியோ காலில் பேசியவர் ஷாருக்கான். ஷிவானி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விழிப்பில் இருக்கிறார். தான் மரணமடைவதற்குள் ஷாருக்கானை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஷாருக்கானின் கவனத்துக்கு செல்ல, அவரே வீடியோகாலில் அழைத்து ஷிவானியுடன் பேசினார். அதோடு ஷிவானியின் மருத்துவ செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது தொடர்பாக ஷிவானியின் மகள் ப்ரியா கூறும்போது, “என் தாயார் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஷாருக்கான் தெரிவித்தார். மேலும், அவர் என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கோல்கட்டாவில் உள்ள வீட்டிற்கு நேரில் வருவதாகவும் கூறினார்". என்றார்.