நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இன்று வெளியான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. கடந்த 2007ல் அமீர்கான் நடித்து இயக்கி வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஆர் எஸ் பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான், சித்தாரே ஜமீன் பர் படக்குழுவினரை அவர்களது செட்டுக்கு நேரில் வந்து சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இவர்கள் மூவருமே எந்தவித பந்தாவும் ஈகோவும் இன்றி ஒருவரது படத்தை மற்றொருவர் பாராட்டுவதுடன் அவர்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதை ஷாருக்கான் இப்போதும் நிரூபித்துள்ளார்.