ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நயன்தாரா, விஜய் சேதுபதி யோகிபாபு ஆகியோரும் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளனர். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து விட்ட விஜய் சேதுபதி இப்போது ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜவான் படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என தற்போது ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடந்தபோது அதில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கானும் வந்திருந்தார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டவரிடம் ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்த விஜய்சேதுபதி, ஷாருக்கானுக்கும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை பேச்சுவாக்கில் கூறியுள்ளார்.
அவரது ஆசை விக்னேஷ் சிவன் மூலமாக அங்கே வந்திருந்த ஷாருக்கானுக்கும் தெரிய வந்ததும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று கூறி தனது படத்தில் விஜய்சேதுபதியை வில்லன் ஆக்க கிரீன் சிக்னல் கொடுத்தாராம் ஷாருக்கான். அந்த வகையில் தனது நண்பனின் விருப்பத்தை தனது திருமண தினத்தன்று நிறைவேற்றி கொடுத்து விட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.