தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர். படப்பிடிப்புக்கு ஒன்றுக்கு சென்றபோது அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் இருந்து இறங்கி ஒரு இளைஞரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றார்.
இந்த படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அமிதாப்பச்சன். அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது இந்த பதிவு அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவை சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட் என்ற அமைப்பு மும்பை போலீசுக்கு அனுப்பி வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, மும்பை போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என தெரிவித்து உள்ளனர். இதனால் அமிதாப் பச்சனுக்கும், அந்த இளைஞனுக்கும் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கான அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
அனுஷ்காவுக்கும் சிக்கல்
அமிதாப் போன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் தனது காரைத் விட்டு இறங்கி பைக்கில் பயணம் செய்தார். இவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதுபற்றியும் மும்பை போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் இவர் மீதும் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.