இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பின் ஹாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடிக்கிறார். ‛‛தனக்கு சரியான சினிமா பின்புலம் இல்லாததல் சில குறிப்பிட்ட நபர்கள் எனக்கு வாய்ப்பு கிடைக்கவிடாமல் தடுத்தனர். இதனால் தான் நான் ஹாலிவுட்டுக்கு வந்தேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பிரியங்கா. ஆனால் அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை.
இந்த நிலையில் பிரியங்காவை துரத்தியது கரண் ஜோஹர் தான் என்று நடிகை கங்கனா ரணவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஹிந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர்தான் பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்புகள் கிடைக்க விடாமல் தடுத்தார். ஷாருக்கானுடன் பிரியங்கா சோப்ரா நெருக்கமாக பழகியதை அவரால் தாங்க முடியவில்லை. சிலர் கும்பலாக சேர்ந்து அவமானப்படுத்தி, சுயமாக வளர்ந்த பிரியங்கா சோப்ராவை இந்தியாவை விட்டு ஓடிப்போகும்படி செய்தனர்.
சினிமா பின்னணி இல்லாமல் திரைத்துறைக்கு வருபவர்களுக்கு கேடு செய்வதற்கு என்றே ஹிந்தி சினிமாவில் மாபியா கும்பல் செயல்படுகிறது. அவர்கள்தான் பிரியங்கா சோப்ராவை துன்புறுத்தினர். அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்றோர் சினிமா துறைக்கு வந்த காலங்களில் இதுபோன்ற நிலைமைகள் இல்லை என்றார்.