எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகையான சன்னி லியோனுக்கு கேரளாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில படங்களில் நடித்தும், ஆடியும் இருக்கிறார். இதனால் கேரளாவில் நடக்கும் கடை திறப்பு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதற்கான கணிசமான தொகையை பெற்றுக் கொள்ளவார்.
அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சன்னி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னிலியோன் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது “மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. எனவே வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இருக்கிறது. எனவே சரியான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்காவிட்டால் சன்னிலியோனை மனுதாரர் தரப்பு துன்புறுத்துகிறது என்று பொருள். இதனால் அவர் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்யும்” என்று கூறி வழக்கை வருகிற 31ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.