புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்து ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. முதல் நாளில் 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் இரண்டாம் நாளிலும் 100 கோடியைக் கடந்தது. நேற்றைய மூன்றாம் நாளிலும் 100 கோடி வசூலைப் பெற்று ஹாட்ரிக் 100 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் மொத்த வசூலாக 200 கோடியையும், வெளிநாடுகளில் 100 கோடியையும் கடந்துள்ளது. இந்திய நிகர வசூலாக 161 கோடி வரை பெற்றுள்ளது என்று பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாம்.
இதற்கு முன்பு தென்னிந்தியப் படங்களான 'கேஜிஎப் 2' 140 கோடியும், 'பாகுபலி 2' 127 கோடியும் பெற்ற சாதனையை 161 கோடி வசூலித்து 'பதான்' புதிய சாதனை படைத்துள்ளது என்கிறார்கள். முதல் முறையாக ஒரு ஹிந்திப் படம் இந்த அளவு வசூலித்திருப்பது பாலிவுட்டினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் நிச்சயம் 400 கோடி வசூலைத் தாண்டிவிடும் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.