பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சல்மான் கான். சில வருடங்கள் முன்பு வரை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தவர். தற்போதுதான் சர்ச்சைக்குரிய செய்திகளில் அதிகம் அடிபடாமல் இருக்கிறார்.
2006ம் ஆண்டு மான்களை வேட்டியாடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் காரணமாக சில நாட்கள் அவர் சிறையில் இருக்க நேரிட்டது. தொடர்ந்து பல வருடங்கள் நடந்த அந்த வழக்கில் அவர் 2018ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் மான்களை வேட்டையாடியதற்காக சல்மான் கானை கொல்லப்போவதாக பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் அறிவித்திருந்தார். இந்த லாரன்ஸ் பிஷ்னாய் தான் சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலாவைக் கொலை செய்ததாக பொறுப்பேற்றவர். தற்போது லாரன்ஸ் பிஷ்னாய் பல்வேறு வழக்குகளின் காரணமாக டில்லி, திகார் சிறையில் இருக்கிறார்.
பாடகர் சித்து கொல்லப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிஷ்னாய் சல்மானுக்கும் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தால் தற்போது சல்மான் கானிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டைச் சுற்றி கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சல்மானும் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களை அதிகப்படுத்தியிருக்கிறாராம்.